News June 7, 2024
தமிழ் வழி கல்வி படித்த மாணவி நீட் தேர்வில் சாதனை

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் ராக்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செண்டு. இவருடைய மகள் சரஸ்வதி. இந்த மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே அரசு பள்ளியில் கல்வி கற்றுள்ளார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
Similar News
News November 12, 2025
நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 12, 2025
நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


