News June 7, 2024

BREAKING: டெல்லி நாடாளுமன்றம் அருகே பரபரப்பு

image

நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சட்ட விரோதமாக மூன்று பேர் நுழைய முயன்றதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஸிம், மோஸின் & ஸோயப் ஆகியோர் 3ஆம் எண் கேட் வழியே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் போலி ஆதார் அட்டையை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து, அம்மூவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 14, 2025

சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை: நிர்மலா

image

GST குறித்து ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், GST வரி குறைப்பில் மாநிலங்களுக்கே அதிக பங்கு உண்டு என்றாலும், சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை என்று CM ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். GST சீர்திருத்தத்தால் 140 கோடி மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளதாகவும் பேசியுள்ளார்.

News September 14, 2025

மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

image

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.

News September 14, 2025

BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்.. முக்கிய அறிவிப்பு

image

நாளை மறுநாள், EPS டெல்லி செல்வதால் தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!