News June 7, 2024
அரியலூர்- சிறுபான்மையினர் கடன் பெற அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே இதில் கடன் பெற விருப்பமுள்ளோர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
அரியலூர் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் அரசு கல்லூரி கலையரங்கில், பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்தரங்கில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமணை மனநல மருத்துவர் அஞ்சிதா கலந்து கொண்டு, மனநலத்தில் குறைபாடு ஏற்படும்போது அவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான மருத்துவம் ஆகியவை குறித்து, பட காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News January 30, 2026
அறியடலுர்: டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடு பகுதியை சார்ந்த வேல்முருகன் மனைவி மாலதி (44). பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது டிராக்டர் மோதி உயிரிழந்துள்ளார். மேலும் மீன்சுருட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


