News June 7, 2024
தமிழகத்தில் பரவலாக கனமழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை நீடித்து வருகிறது. சென்னையில் மாலை வேளையில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். இதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News September 14, 2025
பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.
News September 14, 2025
பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
News September 14, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும்.
★சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து நன்கு காய வைக்கவும்.
★1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும்.
★8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
★அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE IT.