News June 6, 2024
காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகாமில் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 8, 2025
கரூர்: GAS சிலிண்டர் இருக்கா?

கரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News November 8, 2025
தோகைமலை அருகே அலப்பறை.. தட்டி தூக்கிய போலீஸ்

தோகைமலை அருகே ராமச்சந்திரன், பூவரசன் ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News November 8, 2025
கரூர்: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

கரூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)


