News June 6, 2024
மறுவாக்கு எண்ணிக்கை கோரும் தேமுதிக

விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “13ஆவது சுற்றுக்குப் பின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியரே வந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தத் சொல்லி இருக்கிறார். அங்கு நடந்த குளறுபடிகள் குறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
‘SIR’ குறித்து EPS வாய் திறக்காதது ஏன்? துரைமுருகன்

தமிழக மக்களை டெல்லியிடம் அடமானம் வைக்க EPS துணிந்துவிட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போல் TN-ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) மூலம் மத்திய அரசு, அரசியல் உரிமையை பறிக்க முயல்வதாக துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக EPS இதுவரை வாய் திறக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 8, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

<<17339750>>பதில்கள்<<>>:
1. 206 எலும்புகள்.
2. காரைக்குடியில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ளது.
3. ஆல மரம்.
4. 1967
5. Chloroplasts.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 8, 2025
SK-வின் 2 புதிய படங்களுக்கு இசையமைக்கும் சாய்

‘பராசக்தி’, ‘மதராஸி’ படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த 2 படங்களுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 படங்களையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.