News June 6, 2024

தஞ்சாவூர்: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

image

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த தம்பதி மெய்யழகன்(43) – மல்லிகா(33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் மல்லிகா குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஜூன் 4 அன்று திடீரென மெய்யழகன் உயிரிழக்கவே , இதைகேட்டு ஊர் திரும்பிய மல்லிகாவும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 21, 2025

தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶ வட்டாட்சியர், தஞ்சாவூர் – 04362-230456, ▶ வட்டாட்சியர், ஒரத்தநாடு – 04372-233225, ▶ வட்டாட்சியர், கும்பகோணம் – 0435-2430227, ▶ வட்டாட்சியர், பட்டுக்கோட்டை – 04373-235049, ▶ வட்டாட்சியர், பேராவூரணி – 04373-232456, ▶ வட்டாட்சியர், பாபநாசம் – 04374-222456 ஷேர் பண்ணுங்க.

News April 21, 2025

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 21, 2025

லாரி மோதியதில் இளைஞர் பரிதாப பலி

image

திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் சுதாகர் (25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்தார். மனக்கரம்பை முதன்மைச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் ஆல்வின் பலத்த காயமடைந்தார். உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

error: Content is protected !!