News June 6, 2024
நெல்லையில் அதிகபட்சமாக 5.6 மில்லிமீட்டர் மழை பதிவு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை முதலே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று மாலை பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனை அடுத்து திருநெல்வேலியில் 5.6 மில்லிமீட்டர் மழை பதிவும்,பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று காலை நெல்லை மாவட்ட நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
நெல்லை மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

நெல்லை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை<
News September 4, 2025
நெல்லை பெண்கள் விமானப்படையில் பங்கேற்கலாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது தாம்பரத்தில் செப். 5 அன்று நடைபெறும் இந்திய விமானப்படையின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் 21 வயதுக்குள் திருமணமாகாத பெண்கள் பங்கேற்கலாம். 1.1.2005 முதல் 7.1.2008 வரை பிறந்தவர்கள், +2 அல்லது 3 ஆண்டு டிப்ளோமா, 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 4, 2025
நெல்லையில் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார்.இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.