News June 6, 2024

Way2News எதிரொலி: நீலகிரியில் அபராதம் விதிப்பு

image

சமீபகாலமாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் அனுமதி இன்றி சாலையோரங்களில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றது என்று Way2Newsஇல் செய்தி பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் நேற்று அனுமதியின்றி இயக்கிய கழிவுநீர் வாகனத்தை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிமையாளரிடம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழியும் பெற்றனர்.

Similar News

News August 18, 2025

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு விபத்துகளில் பெருங்காயம் அடைந்த ஆறு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50,000 காசோலை பயனாளிகளுக்கு வழங்கினார்.

News August 18, 2025

நீலகிரி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நீலகிரி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும்.

News August 18, 2025

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்: SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!