News June 6, 2024
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News March 24, 2026
சற்றுநேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் <
News March 24, 2026
BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,720 குறைந்து ₹1,04,000-க்கும், கிராமுக்கு ₹340 குறைந்து ₹13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 24, 2026
போர் இன்னும் நிற்கவில்லை.. US பேச்சை மீறும் இஸ்ரேல்

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் நிறுத்தினாலும், தாங்கள் நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் PM நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். தங்களின் போர்க்கள வெற்றிகளால் ஒப்பந்தத்திற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும் என டிரம்ப் நம்புவதாக கூறிய அவர், ஆனாலும் ஈரான் & லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றார். மேலும், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


