News June 6, 2024
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News August 8, 2025
SPORTS ROUND UP: கால்பந்து தரவரிசையில் IND முன்னேற்றம்!

◆கனடா ஓபன் டென்னிஸ்: எம்போகா (கனடா), நவோமி ஒசாகா (ஜப்பான்)-ஐ 2- 6, 6- 4, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
◆நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் சுருண்டது. NZ தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
◆மகளிர் கால்பந்து தரவரிசையில் இந்திய அணி, 7 இடங்கள் முன்னேறி, 63-வது இடத்தை பிடித்துள்ளது.
News August 8, 2025
வரலட்சுமி நோன்பில் பெண்கள் இவற்றை செய்யக்கூடாது!

தீர்க்க சுமங்கலியாக வாழ கடைபிடிக்கப்படும் வரலட்சுமி நோன்பில் பெண்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு: தலைமுடியை கட்டாமல் Loose Hair-ல் பூஜை செய்யக்கூடாது ★மனதில் சஞ்சலத்துடன் பூஜை செய்ய கூடாது ★இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ★கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பாயாசம் வீட்டில் கண்டிப்பாக செய்ய வேண்டும் ★அம்மனின் உடைகள் வெள்ளை கறுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது.
News August 8, 2025
வரும் 28ம் தேதி முதல் துலீப் டிராபி.. இவர்கள் தான் கேப்டன்

2025 துலீப் டிராபி தொடர் பெங்களூருவில் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. வடக்கு மண்டலத்திற்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மண்டலம்- துருவ் ஜுரெல், கிழக்கு மண்டலம்- இஷான் கிஷண், தெற்கு மண்டலம்- திலக் வர்மா, மேற்கு மண்டலம்- ஷர்துல் தாகூர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாராவது தேசிய அணிக்காக விளையாட சென்றால், அவர்களுடைய கேப்டன் பொறுப்பு மற்றவர்களால் நிரப்பப்படும்.