News June 5, 2024
மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

அரியலூர் நகர காவல் நிலைய சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் ராமையன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொல்லாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News March 3, 2026
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் E Nam திட்டத்தின் வாயிலாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விளைபொருள்கள் விற்பனை செய்வது எளிமைப்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் ஆதார் கார்டு, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
அரியலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

அரியலூர் மக்களே, <
News March 3, 2026
அரியலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

அரியலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


