News June 5, 2024
5ஜி அலைக்கற்றை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு நடைமுறை 3ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த இந்த ஏலம் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூன் 13ஆம் ஆம் தேதி நடைபெறும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ₹96,318 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்க வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கை: அன்புமணி

மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்றும் அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் எனவும் சாடியுள்ளார். தமிழக அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.
News August 10, 2025
Online Shopping-ஆல் வரும் நோய்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!

டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!
News August 10, 2025
CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்

CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வுகளை எழுத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடத் தேர்வுகளை பார்த்து எழுதலாம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2020-ல் தேசிய கல்வி கொள்கையில்(NEP) பரிந்துரை செய்யப்பட்டது. உங்கள் கருத்து?