News June 5, 2024
வெற்றி சான்றிதழ் வழங்கல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், அதிமுக கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் 40174 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி அவரிடம் வழங்கினார். கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
Similar News
News April 21, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணி – தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்றக்கோரி அதன் முன்பு தூத்துக்குடி புனித தோமையார் மறை வட்டாரம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணி – போளூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.
News April 21, 2025
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

கன்னியாகுமரி: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.