News June 5, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 140
▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
▶பொருள்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள், பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
Similar News
News September 22, 2025
செங்கல்பட்டு: நள்ளிரவில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 22, 2025
மா வந்தே: PM மோடி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

PM மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘மா வந்தே’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும், உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
ஆபரேஷன் சிந்தூர் 2.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

மொரோக்கோ சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆபரேஷன் சிந்தூர் பாகம் 2, 3 எல்லாம் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே அமையும் எனத் தெரிவித்தார். மேலும், அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.