News June 4, 2024

தந்தையின் நினைவிடத்தில் விஜய் வசந்த் அஞ்சலி

image

மக்களவை தோர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து. கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 10 மணி – தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்றக்கோரி அதன் முன்பு தூத்துக்குடி புனித தோமையார் மறை வட்டாரம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணி – போளூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

கன்னியாகுமரி: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

image

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!