News June 4, 2024
கண் கலங்குகிறேன்: இபிஎஸ்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், எந்த பிரதிபலனும் பாராமல் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அல்லும் பகலும் அயராத உழைத்த தொண்டர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என கண் கலங்குகிறேன் எனக் கூறினார். மேலும், தேர்தல் முடிவு சோர்வடைய செய்யாது. 2026இல் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
என்னை விடுங்கள், போகிறேன் RR-யிடம் சஞ்சு பேச்சு?

வரும் IPL-ல் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு விலகி CSK-ல் இணையவுள்ளார் என தகவல்கள் அண்மையில் பரவின. பயிற்சியாளர் டிராவிட்டுடன் ஏற்பட்ட மனக்கசப்பே சஞ்சுவின் வெளியேற்றத்துக்கு காரணமென கூறப்பட்டது. இந்நிலையில் வரும் IPL மினி ஏலத்துக்கு முன்பு தன்னை RR அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் அல்லது Trade செய்ய அனுமதிக்க வேண்டும் என RR நிர்வாகத்திடம் சாம்சன் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
News August 7, 2025
அதிமுக தலைமை மீது ராஜேந்திர பாலாஜி வருத்தம்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராததால் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக் சபா தேர்தலில் விருதுநகரில் தேமுதிக தோற்றாலும், சுமார் 3.80 லட்சம் வாக்குகள் பெற்றது. தமிழகத்திலேயே தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் இங்கு தான் கிடைத்தது. கூட்டணியில் தேமுதிக இருந்தால் சிவகாசியில் போட்டியிட தனக்கு உதவியாகயிருக்கும், அதுவே திமுகவுக்கு சென்றால் பாதகமாகவும் என வருந்துகிறாராம்.
News August 7, 2025
EPS-யிடம் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை: அமைச்சர்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த வளர்ச்சியை எட்டவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியானது CM ஸ்டாலினின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என EPS சான்றிதழ் தரவேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும், திருப்பூர் SSI படுகொலையை காட்டிலும் மிக மோசமான சம்பவங்கள் வடமாநிலங்களில் நடைபெறுவதாகவும் கூறினார்.