News June 4, 2024

குமரியை மீட்க போராடும் பொன் ராதாகிருஷ்ணன்

image

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் குமரியில் வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். பிறகு, குமரியில் வெற்றி பெற அவர் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸின் வசந்த குமாரிடன் தோல்வியுற்ற அவர், அவரது மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தலில், அவரது மகன் விஜய் வசந்திடம் தோற்றோர். தற்போதும், பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்துள்ளார்.

Similar News

News August 7, 2025

அதிமுக தலைமை மீது ராஜேந்திர பாலாஜி வருத்தம்?

image

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராததால் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக் சபா தேர்தலில் விருதுநகரில் தேமுதிக தோற்றாலும், சுமார் 3.80 லட்சம் வாக்குகள் பெற்றது. தமிழகத்திலேயே தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் இங்கு தான் கிடைத்தது. கூட்டணியில் தேமுதிக இருந்தால் சிவகாசியில் போட்டியிட தனக்கு உதவியாகயிருக்கும், அதுவே திமுகவுக்கு சென்றால் பாதகமாகவும் என வருந்துகிறாராம்.

News August 7, 2025

EPS-யிடம் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை: அமைச்சர்

image

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த வளர்ச்சியை எட்டவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியானது CM ஸ்டாலினின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என EPS சான்றிதழ் தரவேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும், திருப்பூர் SSI படுகொலையை காட்டிலும் மிக மோசமான சம்பவங்கள் வடமாநிலங்களில் நடைபெறுவதாகவும் கூறினார்.

News August 7, 2025

நகை கடனை எங்கு வாங்குவது பெஸ்ட்?

image

அடகு வைக்கும் இடங்களை பொறுத்து நகைக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மாறுகின்றன. பொதுத் துறை நிறுவனங்களில்தான் குறைந்த வட்டி (7.25 – 9%) கிடைக்கும். பிற வங்கிகள்( 10- 14%), நிதி நிறுவனங்களில் (12 – 24%) சற்று அதிகமாக இருக்கும். குறைந்த வட்டி வேண்டுமென்றால் பொதுத் துறை வங்கிகளை தேர்வு செய்யுங்கள். அதேநேரத்தில், உங்கள் நகைக்கு அதிக சதவீதத்தில் கடன் தொகை வேண்டுமென்றால் நிதி நிறுவனங்களை நாடலாம். SHARE IT.

error: Content is protected !!