News June 4, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,இன்று (04.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் இங்கு சுமுகமாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

Similar News

News July 6, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை அமல்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 6, 2025

அரகண்டநல்லூர்: வழிபறியியல் ஈடுபட்ட வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, கீழ்க்கொண்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவ்வழியாக வந்த நபரிடம் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன் என்ற நபரை இன்று(ஜூலை 6) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!