News June 4, 2024
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், தபால் வாக்குகள் செலுத்தப்பட்ட பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை எண்ணப்படுவது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
விலை குறைந்தது…

IRCTC சார்பில் ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வாட்டர் பாட்டில் விற்கப்படுகிறது. GST வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ₹15லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் பாட்டில் ₹10லிருந்து ₹9-ஆகவும் IRCTC குறைத்துள்ளது. எனவே, இனி ரயில்களில் பயணிப்போர் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலை வாங்க வேண்டாம்; ஒரு லிட்டர் வாட்டருக்கு ₹14 கொடுத்தாலே போதும்.
News September 21, 2025
சூர்யகுமார் யாதவ் செய்ததில் தவறில்லை: கங்குலி

ஆசிய கோப்பையில், IND vs PAK போட்டியின்போது, பாக்., வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையானது. இந்நிலையில், பாக்., கேப்டனுடனோ (அ) வீரர்களுடனோ கைகுலுக்காமல் செல்வது சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதில் தவறொன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, இந்த விவகாரத்தை ICC-யிடமும் பாக்., கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளது.
News September 21, 2025
பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது: ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் பலர் சொல்லலாம், ஆனால் கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி நீடித்தால் தான் தமிழகம் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றார். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ள தங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.