News June 4, 2024
நாகையில் மகுடம் சூட்டுவது யார்?

2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் மொத்தம் 71.55 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜூம், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷூம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
Similar News
News August 13, 2025
நாகை விவசாயிகளுக்கு ரூ.6,000; ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டத்தின் கீழ், தொடர்ந்து தவணை தொகை ரூ.6,000 பெற, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இதுவரை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
News August 13, 2025
100% மானியத்தில் பழச் செடிகள்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பப்பாளி, கொய்யா மற்றும் எழுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் உழவன் செயலில் பதிவு செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
நாகை-தஞ்சை பயணிகள் ரயிலின் நேரம் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.