News June 4, 2024
வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட கருத்து கணிப்புகள்

மக்களவைத் தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கருத்துக் கணிப்பு முடிவுகள், ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்திற்காக 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபடி தயாரிக்கப்பட்டவை. இதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 சட்டப்பேரவை கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன ஆனது என்பதை நாம் பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
நாங்கள் முழுநேர அரசியல்வாதிகள் அல்ல: கமல்

தங்கள் கட்சியில் யாருமே 24*7 அரசியல்வாதி கிடையாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அனைவருமே வேலை பார்ப்பவர்கள் எனவும், அவர்களின் வேலையை செய்து கொண்டே, மீதமிருக்கும் நேரத்தில் கட்சிப் பணிகளை செய்வார்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் நூறாண்டுகள் செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் பிரசாரம் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
இன்று IND vs PAK: வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் போனது, தொடரை விட்டு வெளியேறுவோம் என பாக்., மிரட்டியது என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. லீக் போட்டியில் தோற்றதற்கு பாக்., பழிதீர்க்குமா அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News September 21, 2025
தமிழகத்தில் 5 நாள்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார்

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று CM ஸ்டாலின் போலியாக சூளுரைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். TN-ல் கடந்த 5 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.