News June 3, 2024
முதலில் தபால் வாக்குகளை எண்ண திமுக கோருவது ஏன்?

சொற்ப வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில், தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுக வேட்பாளரை விட 49 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். அப்போது, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்கவே, தபால் வாக்குகளை முதலில் எண்ண திமுக கோருகிறது.
Similar News
News September 21, 2025
பரப்புரையில் தவறான தகவலை சொன்ன விஜய்

அலையாத்தி காடுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நாகையில் கடல்சார் கல்லூரி எதுவும் இல்லை என்றும் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டினார். இதனை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. 2021-ல் 45 சதுர கி.மீ பரப்பளவாக இருந்த அலையாத்தி காடுகள் தற்போது 90 சதுர கி.மீ. என பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News September 21, 2025
H1B விசா: மவுனத்தை கலைத்த இந்தியா

H1B விசா கட்டண உயர்வுக்கு, இந்தியா முதல்முறையாக ரியாக்ட் செய்துள்ளது. இந்த விஷயத்தில் நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கட்டண உயர்வால் இருநாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் இதில் உள்ள சிரமங்களை US அரசு உணர்ந்து செயல்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டண உயர்வால் பல இந்தியர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
News September 21, 2025
Cinema Roundup: சமையல் கலைஞராக விரும்பிய தனுஷ்

*ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் அக்.31-ம் தேதி வெளியாகிறது. *வாழ்க்கையில் சமையல் கலைஞராக ஆசைப்பட்டதாக தனுஷ் தெரிவித்துள்ளார். *’காந்தாரா’ படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லரை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேன் நிகாமின் ‘பல்டி’ பட டிரெய்லர் செப்.21-ம் தேதி வெளியாகிறது. *மலையாள திரையுலகில் ‘எம்புரான்’ வசூல் சாதனையை ‘லோகா’ முறியடித்துள்ளது.