News June 3, 2024
மதுரையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(ஜூன் 4) காலை 7 மணிக்கு திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மேற்பார்வையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
Similar News
News July 11, 2025
மதுரையில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகிற 12-ம் தேதி குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
News July 11, 2025
பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து பயனடையலாம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 10% பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.உங்களால் ஒருவர் கண்டிப்பாக பயனடைவார்.
News July 11, 2025
இன்று முதல் 2 சூப்பர் பாஸ்ட் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர், மைசூர்-தூத்துக்குடி ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் அதிகரித்தல் காரணமாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மதுரை வரவேண்டிய போடி எக்ஸ்பிரஸ் 6.40 மணிக்கே வந்துவிடும். அதேபோல் 7.35 மணிக்கு வர வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் 7.25 மணிக்கு வந்தடைந்து விடும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.