News June 3, 2024
வாக்கு எண்ணிக்கை: 1000 போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே அந்தப் பகுதியில் ராணுவப் படையினர் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது. மொத்தம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
ரூ.4 கூடுதல் கட்டணம் கேட்ட நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்

நாங்குநேரியைச் சேர்ந்த கண்ணன், பார்வதிநாதன் ஆகியோர் நெல்லையிலிருந்து நாங்குநேரி சென்ற பஸ்ஸில் ஏறிய போது பைபாஸ் வழியாக செல்லும் என நடத்துனர் கூறினர். பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். மேலும் டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 கூடுதலாக பெற்றார். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் படி நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து நடத்துனர் ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
News July 6, 2025
நெல்லையில் வாகனங்கள் உரிமை கோராவிட்டால் ஏலம்

நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

நெல்லை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10, 12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <