News June 2, 2024

ஜுன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை (4/4)

image

வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். EVM வாக்குகளும் VVPAT சீட்டுகளும் அதற்கென உள்ள விதிப்படி ஒப்பிட்டு சரி பார்க்கப்படும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், EVM இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பாக வைக்கப்படும். யாரேனும் சந்தேகம் எழுப்பினாலோ, வழக்குத் தொடுத்தாலோ, இதை வைத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

Similar News

News September 20, 2025

நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

image

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.

News September 20, 2025

காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

image

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

News September 20, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து, ₹145-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு வெள்ளி விலை விற்கப்படுவது இதுவே முதல்முறை. குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் ₹4,000 அதிகரித்துள்ளது.

error: Content is protected !!