News June 2, 2024
அருணாச்சலில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக

அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான ஆளும் பாஜக, பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால் மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 42 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஏற்கெனவே, 10 பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேசிய மக்கள் கட்சி 6 இடங்களிலும், காங்., 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
Similar News
News September 20, 2025
இவ்வளவு விலையா?

இன்றைய உலகில் விலையை எது வரையறுக்கிறது. ஆடம்பரமான உடைமைகளா? தனித்துவமான பொருள்களா ? பழைமையான வரலாற்று சிறப்புடையதா? பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த வகையில் மேலே, உலகில் மிகவும் விலை உயர்ந்த சிலவற்றை கொடுத்து இருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த விலை உயர்ந்தவை ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
₹1,20,000 கடன் வழங்குகிறது தமிழக அரசு.. GOOD NEWS

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் ₹1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக TN அரசு அறிவித்துள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு ₹60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், கடன் (குடும்பத்தில் ஒருவருக்கு ) வழங்கப்படும்.
News September 20, 2025
தனி விமானம் மூலம் நாகைக்கு பறந்தார் விஜய்

செப்.13-ல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினத்துக்கான பிரசாரத்தை மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாகைக்கு புறப்பட்டார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார். அரைமணிநேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.