News June 2, 2024
36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்த பட்சம் ₹5 முதல் அதிகபட்சமாக ₹20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம், தேர்தல் காரணமாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் அமல்படுத்தப்படுகிறது.
Similar News
News September 20, 2025
ரோபோ சங்கர் கடைசியாக பேசிய வார்த்தை.. கண்ணீர்

மறைவதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசியது குறித்து அவரது அண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். எப்போது கேட்டாலும் தூக்கம் வரலைனுதான் சொல்வான். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றாலும் 4 மணிக்கு எந்திரிச்சு, தூக்கமே வரலைனு TV-ய போட்டு உட்காருவான். ஆனால், அன்று ( ஹாஸ்பிடலில் சேர்த்தநாள்) கடைசியா எனக்கு தூக்கம் வருது; நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என சொன்னான்; அதன்பின் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.
News September 20, 2025
ஈரானில் அதிக சம்பளத்தில் வேலையா? உஷாரா இருங்க

ஈரான் அல்லது வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை, விசாவும் தேவையில்லை என ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய அரசு அலர்ட் கொடுத்துள்ளது. இப்படி அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், ஈரானில் இறங்கியதும், கிரிமினல் கேங்குகளால் கடத்தப்பட்டு, பணம் கொடுத்தால் தான் விடுவிப்பேன் என குடும்பத்தாரிடம் மிரட்டும் சம்பவங்கள் நடப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது.
News September 20, 2025
தனுராசனம் செய்வது எப்படி ?

தனுராசனம் செய்வதால், வயிற்று கொழுப்பு கரைவதுடன், உடல் வலுப்பெறும்.
*தரையில் குப்புற கைகள் & கால்களை நீட்டி படுக்கவும் *மெதுவாக கால்களை மடக்கி, முதுகுக்கு மேலே கொண்டு வரவும் *தலை & நெஞ்சுப்பகுதியை மேலே உயர்த்தி, இரு கைகளையும் பின்னோக்கி எடுத்து சென்று, பாதங்களை பிடித்து கொள்ளுங்கள் *வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும். SHARE IT.