News June 1, 2024

ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

image

பரமக்குடியை அருகே சோமநாதபுரம் பகுதி சேர்ந்த‌ பிரேம்குமார் மீது எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு பதிவான வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து காவல் துறை சார்பில் பிரேம்குமார் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று காலை மதுரை விமான நிலையத்திற்கு பிரேம்குமார் வந்த பொழுது குடியேற்றத்துறை அதிகாரிகள் எமனேஸ்வரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News September 12, 2025

பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

image

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 12, 2025

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

image

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.

News September 12, 2025

பரமக்குடியில் நிற்குமா வெளிமாநில ரயில்

image

பரமக்குடி ரயில் நிலையம் வணிக, கல்வி, சுற்றுலா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையமாக இருந்தும், வெளிமாநில விரைவு ரயில்கள் இங்கு நிற்கவில்லை. ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா, மங்களூர், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் பரமக்குடியில் நிறுத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!