News June 1, 2024
மதுபான கடைகள் மூட உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
தர்மபுரி: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் அரசு வேலை

LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் இந்த <
News August 21, 2025
தர்மபுரி: டிகிரி போதும் LICயில் வேலை

LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
தர்மபுரியில் இலவச சுயதொழில் பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள RSETI தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் கான்கிரீட் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு, உடை, பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்த பின்னர் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2025 மேலும் விவரங்களுக்கு: 04342230511, 6383147667ஐ தொடர்பு கொள்ளலாம்.