News June 1, 2024
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறித்து பணி குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.
Similar News
News August 21, 2025
தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<
News August 21, 2025
தஞ்சை: மனைவியை கொலை செய்த கணவன் கைது

கும்பகோணம் அருகே பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவருடைய மனைவி ஜெய சித்ரா. கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப தகராறு ஒன்றில், ஜெயசித்தராவை மோகன்ராஜ் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தலைமறைவாக இருந்த மோகன்ராஜை திருநீலக்குடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News August 21, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து செலும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொலைபேசி மூலமாக அல்லது நேரடியாக 100 என்ற எண்களை டயல் செய்து தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.