News June 1, 2024
லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் கிராசிங் ரோடு அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த லாரிக்கு பின்னால் சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரியின் பின்பக்கத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் தனியார் ஆம்னி பேருந்தின் டிரைவரின் இரண்டு கால்களும் நசுங்கியது.
Similar News
News July 8, 2025
ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
210 கிலோ ஹான்ஸ் கடத்தல்: 3 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் பகுதியில் இன்று, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 210 கிலோ ஹான்ஸ் மூட்டைகளை காரில் கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சுக்காராம், தோராம் மற்றும் விஜய் பால் ஆகிய மூன்று பேரை கீழ்குப்பம் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 14 சாக்கு மூட்டைகளில் இருந்த ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
News July 8, 2025
கள்ளக்குறிச்சியில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 3,800 துணை சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செவிலியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவி சாந்தி, தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்களான சுசீலா (பகுதி சுகாதார செவிலியர் சங்கம்), உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.