News May 31, 2024
வெயில் கொடுமையால் இதுவரை 54 பேர் பலி

வெயில் காரணமாக நாடு முழுவதும் இதுவரை, 54 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில், 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஹூட் ஸ்ட்ரோக் போன்ற, பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டாகிறது. எனவே, பகலில் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
புடின் என்ன ஏமாற்றிவிட்டார்: டிரம்ப்

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த விஷயத்தில் புடினின் நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதுதான் மிக எளியது என நினைத்ததாகவும், தான் அதிபராக இருந்திருந்தால் 4 ஆண்டுகளுக்கு இந்த போர் தொடர்ந்திருக்காது எனவும் கூறினார். என்ன ஆனாலும் போர்நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், இஸ்ரேல்-காஸா போரும் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.
News September 19, 2025
மழை சீசனில் சளி, இருமல் தொல்லையை விரட்டும் தேநீர்!

சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து, அதில் அதிமதுரம் தூள் அல்லது ஒரு துண்டை சேர்க்கவும் *அதை 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர், அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால், சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 19, 2025
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு முதல் நபராக DCM உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணீருடன் இருந்த ரோபோ சங்கரின் மனைவி, மகள்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும், மேடை கலைஞராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் எனவும் தனது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.