News May 31, 2024

இந்திய அரசின் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

இந்திய அரசின் சார்பில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மைய அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு ஜூன் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News July 10, 2025

ஏலகிரியில் வானொலி நிலையம் தொடங்கப்படுமா?

image

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படும் என கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கோடை விழா நிகழ்ச்சியின் போது அறிவித்தார். ஆனால் இன்று வரை ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது. ஆகவே எப்போது வானொலி நிலையம் தொடங்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News July 10, 2025

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 09.07.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோவிந்தராசு., ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

News July 9, 2025

சரக்கு வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!