News May 31, 2024
மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட உள்ளன. இது தொடர்பாக, உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஷிவ்தாஸ் மீனா, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டும் போன்ற பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Similar News
News September 19, 2025
சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்

சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆனால், கோர்ட் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானதால், அதை மீண்டும் கொண்டு வந்து சோதித்த போது, தங்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News September 19, 2025
ரோபோ சங்கர் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு: இபிஎஸ்

நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான <<17754481>>ரோபோ சங்கரின் மறைவு<<>> அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறு, சிறு விழா மேடைகளில் தொடங்கி, TV, சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் முன்னேறியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அதிமுகவின் பல மேடைகளில் சிறப்பாக செயல்பட்ட அவரது இழப்பு கட்சிக்கும், சினிமா துறையினருக்கும் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 19, 2025
வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 29 காசுகள் சரிந்து ₹88.13 ஆனது. USA பெடரல் வங்கி 0.25 புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதோடு இந்தாண்டின் பிற்பகுதியில் மேலும் குறையும் என கூறியுள்ளது. மேலும், இந்தியா மீதான USA வரிவிதிப்பு, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.