News May 31, 2024
பத்ம விருதுகள் மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஜனவரி 2025 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு அவார்ட்ஸ் டாட் காம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன் 28 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சிறுமி பலி

ராணிப்பேட்டை வாணிச்சத்திரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால், லாரிக்கு பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளனாது. இந்த சம்பவத்தில், ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவரின் 9 வயது மகள் நிஜிதா உயிரிழந்தார். மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
News April 21, 2025
பனப்பாக்கத்தில் மர்மமான முறையில் முதியவர் சாவு

பனப்பாக்கம் காந்தி சிலை அருகில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருத்தணியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.