News May 31, 2024
ஜெயலலிதாவை ‘இந்துத்துவா தலைவர்’ என கூறுவது ஏன்?(1/2)

யார் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை மீண்டும் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இதோ:- *1984இல் ராஜ்ய சபா எம்பியாக இருந்த ஜெயலலிதா 370-ஐ நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். *1992இல் கரசேவை என்பது தவறான வார்த்தை அல்ல என்று ஆதரவு தெரிவித்தார். *1993இல் ராமர் கோயில் கட்ட கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
Similar News
News September 19, 2025
இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கியது

குரேஷியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் வெண்கலம் வென்றுள்ளார். ஸ்வீடன் வீராங்கனை ஜோனா டெனிஸை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். போட்டி தொடங்கியது முதல் சக வீரர் தகுதி நீக்கம், பதக்கம் வெல்லாதது என இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்ட நிலையில், இந்தியா வெறும் கையுடன் திரும்பாது என்பதை அண்டிம் உறுதி செய்துள்ளார்.
News September 19, 2025
காசு கொடுத்து மீம்ஸ் போட சொல்கிறார்கள்: பிரியங்கா

உங்களுக்கு நடிக்கவும், டான்ஸ் ஆடவும் தெரியவில்லை என மீம்ஸ் வருகிறதே என நடிகை பிரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தன்னை பிடிக்காதவர்கள் காசு கொடுத்து தனக்கு எதிராக மீம்ஸ் போட சொல்வதாகவும், ஆனால் இதற்கெல்லாம் மனசு உடைந்து போக மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் தன்னை திடப்படுத்திக் கொண்டு வருவதாகவும், யார் மீம்ஸ் போட்டால் தனக்கு என்ன என கோபமாகவும் பதிலளித்துள்ளார்.
News September 19, 2025
நேதாஜி பொன்மொழிகள்

*சரித்திரம் வலிமையனாது. இதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் எளிதானவை அல்ல. *தன்னை மாற்றுவதற்கு தயாராக இருப்பவனே உலகத்தை மாற்றுவதற்கு தகுதியனாவன். * உண்மையான நண்பனாக இரு, இல்லாவிட்டால் உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அரை நம்பிக்கை உடையவனாக இருக்காதே. * ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுக்காது போனால் அரை நிமிடங்கள் கூட இவ்வுலகத்தில் நாம் வாழ்வை நடத்த முடியாது.