News May 31, 2024
நாளை நமக்கும் இந்த நிலை வரலாம்

வட மாநிலங்களில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராடி வருகின்றனர். அங்கு, லாரி ஒன்றில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைப்புகள் மூலம், நீண்ட வரிசையில் நின்று மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தண்ணீரை சிக்கனமாக சேமிக்காவிட்டால் நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
Similar News
News September 9, 2025
விஜய் உயிரை கொடுத்து வேலை செய்யணும்: கருணாஸ்

கார்ப்ரேட் கம்பெனி போல் வீட்டிற்குள் இருந்தபடி விஜய் அரசியல் செய்வது பயனளிக்காது என கருணாஸ் விமர்சித்துள்ளார். திரைப்புகழை வைத்து மட்டுமே ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைப்பது, தனக்கு நகைப்பை ஏற்படுவத்துவதாக அவர் கூறினார். விஜய் ஆட்சிக்கு வர நினைத்தால் மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்காக உயிரை கொடுத்து வேலை செய்ய வேண்டும் எனவும் கருணாஸ் குறிப்பிட்டார்.
News September 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 453 ▶குறள்: மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். ▶பொருள்: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனதால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
News September 9, 2025
கனரா வங்கியில் வேலை.. உடனே முந்துங்க

கனரா வங்கியில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கியின் மார்க்கெட்டிங், சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கான வயது வரம்பு 20-30 வரை, கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹22,000 வழங்கப்படும். இதற்கு https://www.canmoney.in/careers தளத்தில் விண்ணப்பியுங்கள்.