News May 31, 2024
நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

நாடு முழுவதும் இரண்டரை மாதங்களாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை இறுதிக்கட்ட (7ஆவது) வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Similar News
News August 7, 2025
80 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க: ஸ்டாலின்

இலங்கை சிறையில் உள்ள TN மீனவர்கள் 80 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த ஆண்டில் மட்டும் 17 முறை TN மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல முறை கடிதம் எழுதியும் நேற்று வரை கைது நடவடிக்கை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
News August 7, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪கருணாநிதி <<17327639>>நினைவு <<>>நாள்: CM தலைமையில் அமைதி பேரணி
✪டிரம்புக்கு மறைமுக <<17328569>>வார்னிங்<<>> கொடுத்த PM மோடி
✪திருப்பூர் SSI <<17327420>>கொலை <<>>வழக்கில் என்கவுன்டர்
✪சூது செய்து <<17329000>>பாமகவை <<>>பறிக்க துடிக்கும் அன்புமணி.. ராமதாஸ்
✪தங்கம் விலை மேலும் ₹160 உயர்வு.. சவரன் ₹75,200-க்கு விற்பனை ✪ஆசிய <<17328075>>கோப்பை<<>>: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!
News August 7, 2025
கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.