News May 31, 2024
கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்…

*தினமும் 8 மணி நேரம் தூங்கி கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். *அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். *குறைவான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்க கூடாது. *பழங்கள், காய்கறிகள், கீரை, மீன், முட்டை போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். *ஆண்டுக்கு ஒருமுறை கண்களை பரிசோதிக்க வேண்டும். *அவ்வப்போது கண்களை மூடி, விரல் நுனியால் மெதுவாக அழுத்தி விடலாம்.
Similar News
News September 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 19, 2025
மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின்!

சிக்சர் மழை பொழியும் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவுள்ளார். IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் இந்திய அணியை அஸ்வின் வழிநடத்தவுள்ளார். அஸ்வின் விளையாடுவதால் இந்த தொடர் மேலும் பிரபலமடையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
மெதுவாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்

புதுச்சேரியில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு உயரதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அம்மாநில CM ரங்கசாமி கூறி வந்த நிலையில், அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டிலும் இதை கொண்டு வரலாமா?