News May 30, 2024
தலைமை பதவிகளுக்கு போராடும் பெண்கள்

தலைமைப் பொறுப்புகளில் பெண்களை பணியமர்த்துவது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டு 18.8% ஆக இருந்த பெண்களின் பங்களிப்பு, தற்போது 23.2% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, தலைமை பொறுப்பேற்கும் பெண்களின் எண்ணிக்கை உயரவில்லை. தலைமை பொறுப்புகளை பெற பெண்கள் பல சவால்களை எதிர்கொள்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Similar News
News August 25, 2025
விஜய் பட சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கூலி’..!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
News August 25, 2025
BREAKING: தமிழக ஆசிரியர்களுக்கு நற்செய்தி

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.