News May 30, 2024

சூளகிரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

image

சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பரிய ஏரியில் ராமசாமி என்பவர் குத்திகை எடுத்து ஏரியில் 50 டன் மீன் குஞ்சுகள் விட்டிருந்தார். இந்த நிலையில் ஏரியில் திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. தென்பெண்ணை ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன கழிவுகள் கலப்பதே மீன்கள் உயிரிழப்பு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News

News October 19, 2025

கிருஷ்ணகிரி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1) இந்தியன் ஆயில்: 18002333555

2) பாரத் பெட்ரோல்: 1800224344

3) HP பெட்ரோல்: 9594723895

பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News October 19, 2025

கிருஷ்ணகிரி மக்களே நாளை இதை மறவாதீர்!

image

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.19) 48 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், பர்கூரில் அதிகபட்சமாக 41.8 மி.மீ மழையும், சூளகிரி 3 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, சின்னார் அணை 2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

error: Content is protected !!