News May 30, 2024

குமரியில் மோடி தியானம்: பின்னணி இதுவா?(1/3)

image

இந்தியாவின் ஆன்மிக தலைவர்களில் ஒருவரான விவேகானந்தர், குமரிக்கு 1892இல் வந்து தற்போது அவர் பெயரில் உள்ள மண்டபம் அமைந்துள்ள பாறை மீது 3 நாள்கள் தியானம் செய்தார். பிறகு 1893 சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று பேசி உலகப் புகழ்பெற்றார். இதனால் குமரியில் அவர் பெயரில் விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டது. இன்று அங்கு வரும் மோடி, அந்த பாறை மீது அமர்ந்து தியானம் செய்யவுள்ளார்.

Similar News

News November 27, 2025

அதி கனமழை… மக்களே வெளியே வராதீங்க

image

வங்கக்கடலில் சற்றுநேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

News November 27, 2025

உதயநிதிக்கு CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்

image

கொள்கைப் பற்றோடு உழைப்பால் உயரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். DCM பற்றி கட்சியினர் பாராட்டுவதாக கூறிய அவர், அதை கேட்கும்போது தந்தையாக மட்டுமல்லாமல் தலைவனாகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும், காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழ வேண்டும் என DCM-க்கு அட்வைஸ் செய்துள்ளார்.

News November 27, 2025

தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பதில்

image

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சிகள் இல்லை, 2-ம் ஒன்று போலவே செயல்படுகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். தூய்மையான ஆட்சி TN-ல் உருவாக வேண்டும் என தெரிவித்த அவர், அதனால்தான் ’அன்பிற்கினிய இளவல்’ விஜய்யின் கட்சியில் இணைந்ததாகவும் பேசியுள்ளார். மேலும், 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி நடக்கும் எனவும் மக்களால் வரவேற்கப்படுகிற விஜய் வெற்றிபெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!