News May 30, 2024

கஞ்சா கடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை!

image

மதுரை பேரையூர் காளப்பன்பட்டி பகுதியில் கடந்த 2022ல் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பேரையூர் காளப்பன்பட்டியை சேர்ந்த ஆனந்தன், ஆனந்தகுமார் ,ஆந்திராவை சேர்ந்த தேவராஜ்,பாலவெங்கட சிரிபாபு,
ராஜசேகர், ஹரிஸ் ஆகிய 6 பேர் கைதாகினர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 6 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

News September 11, 2025

எங்கள் வழி தனி வழி – டிடிவி தினகரன்

image

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்; தேவையென்பதை உணர வேண்டும். செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி நாங்கள் அமைகின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி என்றார்.

News September 11, 2025

மதுரை: தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிரடி..!

image

மதுரை மாநகராட்சி சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை கார்ப்பரேஷன் வழங்கிய வெறிநாய் தடுப்பூசி மாநகராட்சி நிர்வாகம் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான நாய்களுக்கு போடப்பட்டது. அடுத்தகட்டமாக மேலும் ஆயிரம் தெரு நாய்கள் கண்டறியப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடக்க இருக்கிறது. நகரில் 38 ஆயிரம் தெரு நாய்கள் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தடுப்பூசி பணிகள் நடைபெறும் என்றார்.

News September 11, 2025

மதுரையில் ஹரியானா மாநிலத்தவர் பரிதாபமாக பலி

image

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்கரை அருகே லாரி வந்தபோது லாரியை நிறுத்தி உதவியாளர் முஃபீத் சாலையோரம் இயற்கை உபாதைக்காக சென்றார். திருப்பி வரும்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

error: Content is protected !!