News May 30, 2024

பெண் காவலர்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பேருந்து

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று (மே 29) அரசு பேருந்தில் சென்ற பெண் காவலர்களை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். நெல்லையிலிருந்து சென்ற அரசு பேருந்து வள்ளியூருக்குள் செல்லாமல் பெண் காவலர்கள் உள்ளிட்ட 4 பயணிகளை வள்ளியூர் புறவழிச் சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து விதிகளை மீறிய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News

News September 15, 2025

நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News September 15, 2025

நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன இதன்படி வருகிற 20, 27 அக்.4, 11 ஆகிய நாட்களில் காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும். சென்று திரும்பி வருவதற்கு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.500 புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

News September 15, 2025

சுத்தமல்லியில் அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்

image

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த 13 மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், பள்ளிகளில் ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

error: Content is protected !!