News May 30, 2024
செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை

கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை முழுமையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் செல்போன், ஐபேட், மடிக்கணினி, போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை உள்ள எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்.
Similar News
News August 13, 2025
கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 13, 2025
கோவை: மத்திய அரசு வேலை வேண்டுமா?

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.21,700 முதல் 69,100 சம்பளம் வழங்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு கோவையில் நடைபெறும். <
News August 13, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.