News May 30, 2024
திருவள்ளூர்: போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தயாளன், மோனிஷ் குமார் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த யுவராஜ், மோகன் ஆகிய 4 பேரும் மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரை கடத்தி வந்தனர். திருத்தணியில் இறங்கி சென்னைக்கு பேருந்து மூலம் கடத்த காத்திருந்தனர். அப்போது அங்கே சென்ற போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைதுசெய்தனர்.
Similar News
News July 7, 2025
பூட்டை உடைத்து ரூ.20,000 திருட்டு

எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 47. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வீடு திரும்பிய சீதாலட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த புது துணிகள், 20,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.