News May 29, 2024
இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா?

ஒரு காலத்தில் வயதானவர்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், தற்போது இளைஞர்களையும் தூக்கமின்மை பிரச்னை பாதித்துள்ளது. உயிரியல் கடிகாரத்தை சரி செய்தாலே தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபடலாம் எனக் கூறும் மருத்துவர்கள், தூக்க சுழற்சியை நம்மால் முறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றனர். இரவில் டீ, காபி குடிப்பதையும், பகலில் தூங்குவதையும் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News November 27, 2025
BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 27, 2025
துயரத்தில் தோள் கொடுப்பதே நட்பு❤️

மங்களகரமாக நடைபெறவிருந்த திருமணம் திடீரென நின்றதால், <<18381176>>ஸ்மிருதி மந்தனா<<>> பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் தனது தோழியுடன் நிற்க வேண்டும் என கருதிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸி.,யில் நடைபெறும் WBBL தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் விளையாடி வந்த Brisbane Heat அணியும் ஏற்றுக்கொண்டது. தோழிக்காக ஜெமிமா செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
News November 27, 2025
சபரிமலையில் 9 பேர் உயிரிழப்பு: அடுத்தடுத்து சோகம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 8 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று கோவையைச் சேர்ந்த பக்தர் முரளி(50), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!


