News May 29, 2024
நவீன் பட்நாயக் உடல்நலம் குறித்து மோடி குற்றச்சாட்டு

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், தனி விசாரணை ஆணையம் அமைத்து, உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. நாளை முதல் ஆரம்பம்!

நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதில், தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை(ஆக.22) முதல் செப். 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ₹50 கட்டணத்துடன் HM-களிடம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT.
News August 21, 2025
PF கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.
News August 21, 2025
பெற்றோருக்கு எழுதிய லெட்டர்; அதிகாரியின் Nostalgic Moment

பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.