News May 29, 2024
குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செட்டியார் குளத்தில் நேற்று மதியம் திருச்சி தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லாக்கோட்டை பீர்முகமது மகன் நவ்பல் (19) குளிப்பதற்காக சென்றார். நீச்சல் தெரியாத அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் உயிரிழந்த நவ்பல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை வழியாக திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண்: 16845, அதேபோல் வண்டி எண்: 16486, 16849 ஆகிய ரயில் வண்டிகளும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News November 2, 2025
புதுகைக்கு சரக்கு ரயிலில் வந்த 1300 டன் உரங்கள்

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாய பணிகளுக்கு தேவையான 1300 டன் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 723 டன், டிஏபி 255 டன், NPK 127 டன், அமோனியம் 190 டன் தூத்துக்குடியில் இருந்து இன்று (நவ.02) புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது. புதுக்கோட்டை விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
புதுக்கோட்டை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


