News May 29, 2024
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் மே.31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர் வேல்முருகன் கூறினார்.
Similar News
News September 10, 2025
மதுரை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாநகர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவரது இரண்டாவது மகன் பாண்டீஸ்வரன்(16), பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவன் பாண்டீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
மதுரை: மேலூர், திருமங்கலம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை மேலூர், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்டம்பர் 18ம் தேதி வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலூரில் 85 ஆயிரம் ஏக்கருக்குதினமும் 900 கன அடியும், திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு 230 கன அடி வீதம் மொத்தம் 1130 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
சோழவந்தான் வைகை ஆற்றில் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (78). இவர் ஆட்டோவில் சோழவந்தான் வந்து கொண்டிருந்தார். அப்போது வாந்தி எடுத்ததால் ஆடைகளை கழுவ சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் போஸ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் விசாரித்து விடுகின்றனர்.